பெயரில் "நகரமும்"
முடிவில் "பட்டியையும்"
இனைத்த இரு நூறு குடும்பம் கொண்ட ...
ஏற்றமிகு ஊரே நகரம்பட்டி,
குட்டி கிராமம் தான்
ஆனால் புகழ் சொல்ல ஏராளம் ,.
தெரியாத சரித்திரமும்
அரியாத சாதனையும்
அறிந்தே அறியச்செய்யும்
ஆனந்த பூங்காதான் இந்த நகரம்பட்டி ...
என்ன இல்லை இவ்வூரில் .. ?
கோயில்உண்டு, குளம் உண்டு
ஆறும்உண்டு .. நல்ல பேறுமுண்டு
பேச நேரமுண்டு
பேசாத மௌனமுண்டு ..
நாட்டார் குடை உண்டு .,
நாட்டுக்கூட்ட பங்கும் உண்டு ,
தேரில் உரிமையுண்டு ..
போரில் பங்கும் உண்டு ,
குட்டி ஊராயினும் கூத்தாடும் குளங்கள் உண்டு ,
பனைமரம் அதிகமுண்டு ,
பட்டாபிஷேகமுண்டு ,
கூட்ட புளி உண்டு , கோட்டையில் கொடியுமுண்டு!
புரவி பொட்டலுண்டு,
பொங்கச்செய்யுண்டு ,
போர்க்கால வயலுமுண்டு ,
செட்டி ஆறுமுன்டு,
செவிட்டு மடையுமுண்டு
வண்ணாந்துறையும் உண்டு,
வருமானம் நிறைய உண்டு
வேங்கைப்புலி குளமுண்டு ,
வேடிக்கைமனிதருண்டு,
வேதங்கள் நிறைய உண்டு!
அனைக்கட்டும் ஒன்றுஉண்டு,
அருகிலே ஆறும் உண்டு
சவுக்கை இரண்டு உண்டு ,
சௌகரியம் நிறையு உண்டு ,
சரிநிகர் அம்மன்கள் சரித்திர கதையுமுண்டு ,
"கரியான் காளி"யுண்டு ,
"அழகியம்மன் "அருகில் உண்டு ,
ஐயனார் கோவிலுண்டு ..
அருகிலே ஆடும் உண்டு ..
சேங்காய் குளமுண்டு ,
சேகரங்கள் நிறைய உண்டு,
சிவனுக்கு கோவிலுண்டு
சிவச்சொத்து நிறைய உண்டு ,
புதூரணி குளமும் உண்டு,
புள்ளையார் கோவிலுண்டு!
கட்டுப்பாடு அதிகம்உண்டு .,
தட்டுப்பாடு இருந்ததில்லை ..
பஞ்சாயத்து தலைமைஉண்டு ,
பஞ்சாயங்கள் குறைய உண்டு,
மீன்பிடிகுளங்கள் உண்டு ,
தேன் கூடு அதிகம் உண்டு ,
சின்ன ஊராயினும்
எண்ண முடியவில்லை ,
இடங்கள் தெரியவில்லை ,.
வண்ணவண்ணமாக
வாழ்வில் தோன்றுகின்ற
சிந்தனை சொல்லிடவே !!!
கவிகள் அதிகமுண்டு
காவியங்கள் படைத்ததுண்டு ..
தெரியுமா உங்களுக்கு ? ,.
இருநூறு குடும்பத்தில் ..
வாரிசுகள் பறந்து வாழும்..
பசுமை பூமியன்றோ?
எவ்வூரில் நாங்கள் இல்லை ,?
எதில் எங்கள் பெயர்கள் இல்லை ,?
எங்குமே வாழ்கிறோமே!!!
எக்கச்சக்க புன்னகையில்...
உள்ளூரில் இருந்தாலே..
ஒரு நொடி போதாது பெருமைஎன்று..
அயல் நாட்டில் அடிவைத்துஒரு நொடி போதாது பெருமைஎன்று..
அதிகமாய் வாழுகிறோம் ..
உள்நாட்டில் . இருந்துவிட்டால் ..
உறவுகள் அறியும் ..
ஆனால் உலகம் அறிந்திடவே
கடல்தாண்டி வாழுகின்றோம் ..
என்றும் அன்புடன்
"நகரம்பட்டி"
Lyrics written by "Ramesh"
Lyrics written by "Ramesh"