Thursday, November 24, 2011

மரணம்...

யாராலும் தவிர்க்க முடியாதது....
எவராலும் மறக்க முடியாதது....         
ஈசனின் சர்வ நிச்சயிக்கப்பட்ட..
ஒரே தீர்ப்பு....

மரணம்...

திசை !!!!!!!!!


திசை என்று தெரியாமல்
 தவிக்கும் என் ,
செவிகளுக்கு...
உன் சலங்கை,
 ஓசைகள் தானே...
என்னை ,
தாலாட்டும் இன்னிசை.... தோழி!!!!!

Tuesday, November 22, 2011

காத்திருந்தேனே...


மார்கழி திங்கள் தோறும்,
நோம்பு இருந்து உனக்காக
காத்திருந்தேன்...  
நீ, எப்பொழுது
வருவாய் 
என,
புறாவை அல்ல  

 நிலாவை,
தூது விட்டேன் கண்ணா!!!!!!!!!

Friday, November 18, 2011

பிழை !!....


என்ன பிழை 
அவன் என்னிடம் கண்டான் 
என்று,தெரியவில்லை  தோழி..........!!!
ஆனால் ,இன்று
 அவன் என் பெயரை கூட ,
சொல்ல மறந்துவிட்டான்....!!!

Wednesday, November 16, 2011

சிற்பி !!

என்னை செதுக்க...,
 தன்னைத்தானே ,
மேளிகிய ........
ஒரு சிற்பி 
என்
தந்தை !!!








இளமை!!!

வறுமையும்,தனிமையும், இளமையின்
 புற்று நோய் !!!



நித்திரை!!!

நித்திரை இல்லாமல்  தவிக்கும்!!
 என்  ,
கண்களுக்கு ,
உன்  "வருகை" தானே,
" சித்திரை" -கண்ணா!!!!!!!!!

கல்லூரி...

என் கல்லறையை 
 விட ,
கொடூரமானது,
 அந்த அனுபவம்...
எனக்காக 
என் 
கல்லறையில்,
விடும்,
கண்ணீரை விட..
என் தாய், தந்தை ,
என் ,
கல்லூரி வனவாசத்துக்கு கொடுத்த
 கண்ணீர் அதிகம்,
பட்டு. பட்டு..
 கண்ணீரை,
 விற்று ,
வாங்கிய பட்டம் 
அது,
 மூச்சு நின்று போனாலும் 
பட்டு  போகாது...
மறந்து போகாது.. 
அந்த ரெண்டு எழுத்து B.E.