Thursday, October 20, 2011

பட்டு புடவை....

 

ஒரு பெண்ணின் அழகுக்கு  
அழகு செறிக்கும்
பட்டு  புடவை....

அந்த புடவைக்கு வண்ணம் 
கொடுக்கும் அந்த
 நெசவாளனின்...வாழ்வில் ஏன் அந்த
 பட்டாம்பூச்சி...
 பட்டு பொய் இருக்கிறது!!! 


Saturday, October 15, 2011

தோழா !!!

தோழா இன்று உன் தோல்மீது 
சாயும் போது தான் தெரிகிறது ,
சுமைகள் சங்கடங்கள் அல்ல ,
அவை ,
சுகங்கள்  தான்!!!

Monday, October 10, 2011

நிழலும் நிஜமும்

நிழல்கள் அழிந்தாலும் நட்பின்
 நிஜங்கள்
 அழிவதில்லை ...!!!

Thursday, October 6, 2011

விஜயதசமி:):)!!!


ஒரு விஜயதசமி அன்று தான்
எந்தையும் தாயும் என் கரம் பிடித்து
கலைவாணி முன் 'அ' எழுத
சொல்லி கொடுத்தார்கள்
இத்தனை ஆண்டுகளுக்குப் பின்
இன்று அதே விஜயதசமியன்று
கவிதை எழுத ஆரம்பித்திருக்கிறேன் :):)

தனிமை!!

அன்று என் நிறத்தால் தனிமை ஆனேன்
பின் என் கல்வியால் தனிமை ஆனேன்
இன்றோ இலவு காத்த கிளியானேன் 

நான் தான்

சிறந்த பரிசு......



உன் இதழோடு என்ன  இதழ்  சேர  வேண்டும் ,
உன்  மார்பில்  என்  தலை  சாய
வேண்டும் ,இது  காதல்  இல்லை ,

காமம் கூட   இல்லை ,
நம்  உறவுக்கு  என்  உயிர்  தரும்  பரிசு ....
உனக்காக உயிர் கொடுத்துவிடலாம்  ஆனால்,
  உன்  உயிரோடு  உயிராக  இருப்பது  சிறப்பு .

அண்ணி....


ஒரே ஊரில் பிறந்தோம்...
ஒரே தேதியில் பிறந்தோம்...
வேறு வேறு   மாதங்களில் மலர்ந்தோம்...
நீ என் அக்காவா அல்லது தங்கையா ?
இல்லைஅதற்க்கும் மேல் தான் பெண்ணே நீ எனக்கு...
ஆம்என் அண்ணனை மணந்ததால் எங்களின்
அண்ணி எனும் உயர்ந்த அந்தஸ்து கொண்டவள் நீ...
எங்கள் வம்சத்தின் குல விளக்கும் நீ தான்....
உன்னோடு இருந்த பத்து மாதங்கள்என் தாயின் கருவில்
இருந்த நாட்களுக்கு சமமாக எண்ணுகிறேன்...
அண்ணியே,
என் அக்காவாக தலை சீவிபூ வைத்து பார்த்தாய்,
அண்ணனாக என் தவறுகளை மன்னித்தாய்,
தம்பியாக என் தோள்களை  தாங்கிக் கொண்டாய்....
என் ஆனந்தியேஉன் புன்னகையோடு  
என் தோழியாக என் மணநாள் அன்று இருப்பாயா நீ?