Saturday, January 7, 2012

ஐயப்பன்!!!

நான் எழுதிய தமிழ் எழுத்தின் முதல் உச்சரிப்பு நீ ,
அர்த்தனாரிஸ்வரனின் பிரிய மகனும்  நீ
என் தாய்தந்தை எனக்கு குடுத்த உயில் நீ,
என் தாயின் தாலாட்டை கேட்டதை விட...
உன் சரண கோஷங்கள் கேட்டது தான் அதிகம்..
அது தானோ  என்னவோ ஒரு ஊசி போட்டாலும் கூடஅம்மா என்று அழைக்காமல் அய்யனே என் ஐய்யப்பனே
என்று அழைத்ததுதான் அதிகம் .....
உன்னை நேரில் பார்த்தது இல்லை,
ஆனால் உன் முகத்தை.. என்மனதில் உருவகப்படுத்தி  வைத்திருக்கிறேன்..

தாயின் பாசத்தைநட்பின் நேசத்தை..
எனக்கு கற்று கொடுத்த ஆசான் இவன்..
உன் சரணங்கள் உச்சரிக்க சர்வ பாக்கியம் குடுத்த  
எனக்கு இன்னும் ஓர் வரம் வேண்டும் ...
மறு ஜனனம் என்று ஒன்று இருந்தால்... 
அதில் நான்
ஒரு கல்லாக அல்லது உன் பக்தர்கள் ஓய்வெடுக்க உதவும்ஒரு மரமாக பிறக்க வேண்டும் உன் சபரிமலையில்....
வரம் தருவாயா என் ஐய்யப்பனே......... 

2 comments:

  1. ஒவ்வொரு ஐய்யப்ப பக்தர்களின் மனதில் இருக்கும் எண்ணங்கள் இங்கே வரிகளாய்..........

    ReplyDelete