Friday, March 30, 2012

"ஸ்ரீ ராமன்"


"ஸ்ரீஎன்ற சொல்லுக்கு உயிர்கொடுத்த ஸ்ரீ ராமன் நீ,
துளசி தாசனின்  நாயகன் நீ,
அஞ்சணை புத்திரனின் நாடி நீ,
தசரதனின்  புத்திரகாமேஷ யாகத்தின் பரிசு நீ,
ரகு குல  நாதனின் வம்சம் நீ,
ஜனகரின் புதல்வியை கரம் பிடித்த மன்னன் நீ,
சேதுசமுத்திரத்தின்  அஸ்திவாரம் நீ,
சிவனின்  அம்பை உடைத்த மாவீரன் நீ
தன் தந்தையின் நரைத்த 
முடியால் கூனியின் சூழ்ச்சிக்கு பலி ஆனவன் நீ,
தந்தையின் வாக்கைசகோதர பாசத்தைபத்தினியின்விரதத்தைபக்தியின் நேசத்தை......
மூவுலகத்துக்கும் ஸ்தாபித்த உன் புகழுக்கு எல்லையேஇல்லை...
தினமும் எழுதுகிறேன் உன் நாமத்தை....
அப்போதாவது...
ப்ராப்திக்க வேண்டும் ....
அந்த அணிலுக்கு நீ,
கொடுத்த
பாக்கியத்தை மண்ணுலகில் வாழும் எல்லோருக்கும்......

Wednesday, March 28, 2012

முத்து !!

என்ன சொல்ல...  
உன்னை பற்றி,  
ஜூலை மாதத்தில் மலர்ந்த முத்து நீ,
உன் பெயரிலேயே தமிழ் கடவுளை வைத்திருப்பவன் நீ, 
முத்து குமரன் என்று பெயருள்ள ஸ்ரீ ராமன் நீ,  
முத்து போல நீ பேசும் உன்
தமிழ் வார்த்தைகளுக்கு ஒரு எல்லையே  இல்லை..
எந்திரன் கூட தோற்று போகும் உன் டைப்பிங்  ஸ்பீடில்..
நீ கட்டும் கட்டிடம் போல உன் வாழ்வு ஒயரட்டும்...
கோரிக்கை ஒன்று வைக்கிறேன்
அண்ணா...
என்ன ஆனாலும் உன் நகைச்சுவை உணர்வை
மட்டும் மறந்து விடாதே...
ஏன் என்றால் நெருப்பு இல்லாமல் புகையாது...
உன் நகைச்சுவை இல்லாது இந்த பூமி சுற்றாது.

Tuesday, March 27, 2012

மெளனம்

கடற்கரையில் மெளனம்... 
அலைகளை ... 
ரசிப்பதற்காக !
 பள்ளியில் மெளனம்...
 பாடம் ... 
பதி(புரி)வதற்காக ! 
தியானத்தில் மெளனம்... 
மனதை ... 
ஒருமுகப்படுத்துவதற்காக ! 
தோல்வியில் மெளனம்..
வெற்றி ...

Wednesday, March 21, 2012

ஓவியம்

என் தாய் சித்தரித்த ஓவியம் நீ...
உத்தராயண தினம் 

அன்று ,
திருவாதிரை நக்க்ஷதிரத்தில் பிறந்த
 ஸ்ரீராமன் நீ...!!
சந்திரனின் ராஜ்யத்தை 

தலை,
 தாங்கும் தளபதி நீ..!!!
நான் நெஞ்சில்,

 சுமந்த,
 மூத்த பிள்ளை நீ...!!
பொறுமையின்,
சிகரம் நீ...!!
நீ, பேசிய வார்த்தைகளை விட,

 உன் கண்கள் பேசியது தான் அதிகம்...
நீ வாங்கும் (BE) பட்டம் தான்,

 இந்த 
வனவாசத்தில் உனக்கு 
கிடைக்க போகும் பட்டாபிசேகம்....
தவமாய் இருந்து,

வரம் கேட்டு கத்து இருக்கிறேன் 
அந்த
 பட்டாபிசேகத்தை இந்த
 கண்களால் காண....!!!
கண்களில் அன்று வரும், 

கண்ணீர் தான்
 தித்திக்கும் என்றென்றும்..!!
ஏழேழு, ஜென்மத்துக்கும்

 நம் ,
உறவு இருக்க வேண்டும்...
அது தான்,
 என்னவோ... 
உன்னை காண 
எனக்கு ஏழு வருடங்கள் ஆகி விட்டது...
ஏழு வருடங்கள் ஆனாலும்,

 எழுபது வருடங்கள் ஆனாலும்,
 என்றென்றும் எனக்கு "BABIE" நீ.......
- Show quoted text -