Monday, September 24, 2012

வைப்ரேஷன்...!!!

ஆடி மாசத்தில் என் வீட்டில் அடி வைத்து சுந்தரத்தின் ராஜ்யத்தை 
அடி மேல்  அடி ஆள பிறந்த மன்மத ராசா இவன் ,
நான் செல்லமா (vibration) வைப்ரேஷன்  என்று கூப்பிடும்
செல்ல தம்பி இவன் ,
நினைவுகள், ஒவ்வொன்றும்  என் கண் முன்னால்
இருக்கிறது என் தந்தை என் அம்மாவிடம் 
கண்ணாமூச்சி  விளையாடியது,
 நீ பிறந்த போது இருக்கும் ,
அன்று வந்த அந்த தந்தியில் இருந்த சுவாரசியம்
 இன்றும்தொடர்கிறது ,
மூல நட்சத்திரத்தில்  பிறந்து மூளையை மூலதனமாக்கி  அஸ்திவாரமாக  இருக்கும் ஆதிசேஷன் நீ ,
சேதுவின் கடலில் 7வது   முத்து  நீ ,
இவன்  நேசிக்கும், தளபதி  போன்று பேச்சுக்களில்
 துள்ளி விளையாடும் கில்லி ,
சிற்பி  கை பட்ட இடம் எல்லாம் எப்படி சிலை ஆகுமோ ,
அது, போல  இவன்  கை பட்ட  கணினி எல்லாம்  எந்திரன்  ஆகும் ,
பாசத்துக்குக்காகவே ஆகிய  நாத்திகவாதி இவன் ,
நீ, உருவாக்கும் ப்ரோக்ராமிங் போல உன் திறமைகள்
 வளர வேண்டும் ,..,
பின்பும்  
உன் (சக்தி ,ஜெஸ்ஸி ) இடம் சொல்லுவேன் இந்த கார்த்திக்கின் லீலைகளை தொடரட்டும்........

பொக்கிஷம் ...

என் சித்தி எனக்கு கொடுத்த அறிய பொக்கிஷம் நீ ,
என்  வீட்டு செல்ல  பிள்ளை  நீ ,
என் முகம் பால் வடியும் முகம் என்று வர்ணிக்கும் தம்பி நீ  ,
"புஜி"  என்று அழைக்கும் செல்ல பிள்ளை நீ ,
சக்தியின்   சாம்ராஜ்யத்தின்   தல  தளபதி  நீ ,
சேது வீட்டின் 6 ஆம் முத்து நீ ,
அந்த கண்ணன்  செய்வதை போல நீ  செய்திருக்கும் லீலைகளுக்கு ஒரு எல்லைகள் இல்லை ,
அவனைவிட மிகவும் பாக்யசாலி நீ,
அவனை கொஞ்ச  இரண்டு அன்னைகள் மட்டும் தான்,
ஆனால் உன்னை  தோளில் சுமக்க இங்கு நான்கு அன்னைகள் ,
7 மாதத்தில்   பிறந்து,
"பிரநீத்" என்று பேர் சூட்டி கொண்டு ,
7 லோகத்தை ஆளும் திறமை கொண்டவன் நீ ,
யாரும் எவரும் தொலை தூரத்தில் இருந்தாலும் தொடர்பு 
 கொள்ளும்   தொ(ல்)லைப் பேசி நீ ,
உன் தாய் நினைத்த கனவுகளை நீ, கட்டும் கட்டிடம் போல உயர  வேண்டும் ,
அந்த மழையில்  பிடித்த பாசம்(பாசி) கூட மறைந்து விடும் ஆனால்
நாங்கள் எல்லாரும்  உன்  மேல்  வைத்த   பாசம்  மட்டும் மாறாது 
அது போல் எங்கள் அனைவரின் நம்பிக்கையையும் நீ 
காப்பாற்றுவாய் என நம்புகிறேன்  என் அன்புத் தம்பி..........

அஜித்

எனக்கு நினைவு தெரிந்த நாள்  முதல் இவன்  கைவண்டியை பிடித்து நடந்ததை விட என்  தாய் (சித்தியின்)சேலையின்  முந்தானையை பிடித்து நடந்தது தானே  அதிகம்,
அஜித் என்ற பேருக்கு" மாயம்" அல்லது,"அடிகற்பு" என்று அர்த்தம்,
அதே போல இவன் அனைவரின் மனதை  மாயமாய் கவர்ந்து அவர்கள் மனதில் நீண்ட இடம் பிடிப்பவன் இவன் ,
பாரதி ராஜியத்தை  தாள தாங்கும் தளபதி இவன் ,
சேதுவின் கடலில்  5 ஆம் முத்து இவன் ,
இவன் அவனுக்கு பேரை சூட்டியதை போல மயக்கம் ஆகும்
கண்ணன் இவன் ,
என்னுடன் வெண்மேகத்தில் ஆட ஸ்ருதியோடு லயம் சேர்த்த
 தம்பி  இவன் ,
எவராலும் இவனை போல பாடும் பாட்டில் வரிகளை சொல்ல முடியாது ,
அந்த கவிஞர் கூட மறந்து போவான்  அந்த வரிகளை இவன் அல்ல,
இவனின் கையெழுத்து போல இவனின் பேச்சும் யாரையும் காயப்படுத்தி விடாது,
நாம் இருவரும் சேர்ந்த சந்தோஷங்களுடன் சங்கடங்களையும் சரிசமமாக பகிர்ந்து கொண்டோம்,
இவன்   சிறிய வயதிலேயே வாழ்கையை  நோக்கி செல்லும்  ஒரு யதார்த்தவாதி நீ ,
நீ கட்டும் அணைகள் போல உன் வாழ்க்கை சந்தோசமாக இருக்க வேண்டும்,
அன்று  நான் தோள் மீது சுமந்த தம்பி,இன்று  என் தோளுக்கு மேல் வளர்ந்த தோழன் நீ  . 

Friday, September 7, 2012

ஜான்சி ராணி

என்ன சொல்வது  இவளை பற்றி ,
இவள் கையை  சூப்பும்  நாள் முதல் இவள் தன் மன்னவனை கை கோர்க்கும்   நாள்  வரை அறியும்  தோழி நான் ,
  அந்த பாரதி கண்ட புதுமை பெண் (ஜான்சி ராணி )நீ,
சூட்டிய  பேரை போல இவள் தைரியத்திற்கு,ஒரு
எல்லையே  இல்லை ,
அந்த  ஜான்சி  ராஜ்யத்தை,அந்த ஆண்டதை போல!!!தவறு என்  வீட்டை  என்றும் ஆளும்"
(ஜான்சி ராணி " நீ,
சேதுவின் கடலில் 4  வது முத்து நீ ,
அந்த  நக்கீரன் கூட தோற்று போவான்,
 இவளிடம்  
விவாதம் செய்து  கொண்டு ,
நாம் ,இருவரும் சேர்ந்து  பகிர்ந்த சங்கடங்களை விட,  நகைச்சுவைகள் தானே அதிகம் என் கண்மணியே ..
கோரிக்கை ஒன்று வைக்கிறேன் கேளடி என் கண்ணே ,
கோபம் இருக்கும் இடத்தில தானே குணம்,இருக்கும் எனபார்கள் ,
அது தானோ என்னவோ நான் உன்னிடம் குணத்தை விட்டு கோபம் தன் காட்டி இருக்கிறேன் ...
கடலில்  சங்கமித்த நதி போல,நீயும் உன் மணவாளனும் சங்கமம் ஆக வேணும்,அதில் வீசும் அலைகள் போல 
 
உன் வாழ்வு  உயரவேண்டும் .




Tuesday, September 4, 2012

வாழ்கை!!

வாழ்கை
காவியதிர்ககாவோ கல்லறைககாவோ இல்லை
இரு மனம் சேரும் காதலுக்கா தான் 
வாழ்கை!!