என் வீட்டு செல்ல பிள்ளை நீ ,
என் முகம் பால் வடியும் முகம் என்று வர்ணிக்கும் தம்பி நீ ,
"புஜி" என்று அழைக்கும் செல்ல பிள்ளை
சக்தியின் சாம்ராஜ்யத்தின் தல தளபதி நீ ,
சேது வீட்டின் 6 ஆம் முத்து நீ ,
அந்த கண்ணன் செய்வதை போல நீ செய்திருக்கும் லீலைகளுக்கு ஒரு
அவனைவிட மிகவும் பாக்யசாலி நீ,
அவனை கொஞ்ச இரண்டு அன்னைகள் மட்டும் தான்,
ஆனால் உன்னை தோளில் சுமக்க இங்கு நான்கு அன்னைகள் ,
7 மாதத்தில் பிறந்து,
"பிரநீத்" என்று பேர் சூட்டி கொண்டு ,
7 லோகத்தை ஆளும் திறமை கொண்டவன்
யாரும் எவரும் தொலை தூரத்தில்
கொள்ளும் தொ(ல்)லைப் பேசி நீ ,
உன் தாய் நினைத்த கனவுகளை நீ, கட்டும் கட்டிடம் போல உயர வேண்
அந்த மழையில் பிடித்த பாசம்(பாசி) கூட மறைந்து விடும் ஆனால்
நாங்கள் எல்லாரும் உன் மேல் வைத்த பாசம் மட்டும் மாறாது
அது போல் எங்கள் அனைவரின் நம்பிக்கையையும் நீ
காப்பாற்றுவாய் என நம்புகிறேன் என் அன்புத் தம்பி..........

No comments:
Post a Comment