Friday, September 7, 2012

ஜான்சி ராணி

என்ன சொல்வது  இவளை பற்றி ,
இவள் கையை  சூப்பும்  நாள் முதல் இவள் தன் மன்னவனை கை கோர்க்கும்   நாள்  வரை அறியும்  தோழி நான் ,
  அந்த பாரதி கண்ட புதுமை பெண் (ஜான்சி ராணி )நீ,
சூட்டிய  பேரை போல இவள் தைரியத்திற்கு,ஒரு
எல்லையே  இல்லை ,
அந்த  ஜான்சி  ராஜ்யத்தை,அந்த ஆண்டதை போல!!!தவறு என்  வீட்டை  என்றும் ஆளும்"
(ஜான்சி ராணி " நீ,
சேதுவின் கடலில் 4  வது முத்து நீ ,
அந்த  நக்கீரன் கூட தோற்று போவான்,
 இவளிடம்  
விவாதம் செய்து  கொண்டு ,
நாம் ,இருவரும் சேர்ந்து  பகிர்ந்த சங்கடங்களை விட,  நகைச்சுவைகள் தானே அதிகம் என் கண்மணியே ..
கோரிக்கை ஒன்று வைக்கிறேன் கேளடி என் கண்ணே ,
கோபம் இருக்கும் இடத்தில தானே குணம்,இருக்கும் எனபார்கள் ,
அது தானோ என்னவோ நான் உன்னிடம் குணத்தை விட்டு கோபம் தன் காட்டி இருக்கிறேன் ...
கடலில்  சங்கமித்த நதி போல,நீயும் உன் மணவாளனும் சங்கமம் ஆக வேணும்,அதில் வீசும் அலைகள் போல 
 
உன் வாழ்வு  உயரவேண்டும் .




No comments:

Post a Comment