Monday, September 24, 2012

அஜித்

எனக்கு நினைவு தெரிந்த நாள்  முதல் இவன்  கைவண்டியை பிடித்து நடந்ததை விட என்  தாய் (சித்தியின்)சேலையின்  முந்தானையை பிடித்து நடந்தது தானே  அதிகம்,
அஜித் என்ற பேருக்கு" மாயம்" அல்லது,"அடிகற்பு" என்று அர்த்தம்,
அதே போல இவன் அனைவரின் மனதை  மாயமாய் கவர்ந்து அவர்கள் மனதில் நீண்ட இடம் பிடிப்பவன் இவன் ,
பாரதி ராஜியத்தை  தாள தாங்கும் தளபதி இவன் ,
சேதுவின் கடலில்  5 ஆம் முத்து இவன் ,
இவன் அவனுக்கு பேரை சூட்டியதை போல மயக்கம் ஆகும்
கண்ணன் இவன் ,
என்னுடன் வெண்மேகத்தில் ஆட ஸ்ருதியோடு லயம் சேர்த்த
 தம்பி  இவன் ,
எவராலும் இவனை போல பாடும் பாட்டில் வரிகளை சொல்ல முடியாது ,
அந்த கவிஞர் கூட மறந்து போவான்  அந்த வரிகளை இவன் அல்ல,
இவனின் கையெழுத்து போல இவனின் பேச்சும் யாரையும் காயப்படுத்தி விடாது,
நாம் இருவரும் சேர்ந்த சந்தோஷங்களுடன் சங்கடங்களையும் சரிசமமாக பகிர்ந்து கொண்டோம்,
இவன்   சிறிய வயதிலேயே வாழ்கையை  நோக்கி செல்லும்  ஒரு யதார்த்தவாதி நீ ,
நீ கட்டும் அணைகள் போல உன் வாழ்க்கை சந்தோசமாக இருக்க வேண்டும்,
அன்று  நான் தோள் மீது சுமந்த தம்பி,இன்று  என் தோளுக்கு மேல் வளர்ந்த தோழன் நீ  . 

No comments:

Post a Comment