Tuesday, July 17, 2012

புதுமைப் பெண்!!

மங்களத்தில் பிறந்து  நகரத்தில் (நகரம்பட்டியில்) மாங்கல்யம் 
பெற்ற மங்கை நீ ,
அந்த பாரதி, கண்ட புதுமைப் பெண் நீ,
அதனாலோ ,என்னவோ பாரதி பிறந்த அன்று ஜனனம் ஆனாய் !
சேதுவில் மூன்றாம் குலவிளக்கு நீ ,
அந்த தட்சிணாமூர்த்தி..தவறு!!...சுந்தரமூர்த்தியின் விஜயகவுரி (விஜயா) நீ,
நீ, பேசும்  தமிழை விட உன் ஆங்கிலமே இனிமையிலும் இனிமை !!
முயற்சியின் முக்கியத்தை உன் பிள்ளைகட்கு போதிக்கும் புத்தர் நீ !
அந்த (ஜெனரல்) டயர் கூட மறந்திருப்பான் அவன் அரங்கேற்றிய அந்த நாளை, ஆனால்  மறக்கவில்லை நீ !

சுகம்!!


சித்திரை மாதம்  நித்திரை கழித்து, 
 வைகாசி மாதம்
 என் ,
கூட என் வீட்டுக்கு வந்த செல்ல சித்தி நீ !
சித்தி அல்ல ! தவறு!!.என் தோழி நீ !
"பொறுத்தார் பூமி ,ஆள்வார் "என்ற சொல்லுக்கு மறு உதாரணம் நீ, 
நாம் இருவரும் பகிர்ந்து கொண்ட சங்கடங்களை  விட, 
சிறு,சிறு நகைச்சுவைகள் தானே அதிகம் !!
அந்த பாரதிக்கு கிடைத்த சுமதி..தவறு.."சுகம் "நீ 
சேது வீட்டின்  இரண்டாம் குலவிளக்கு நீ ,
இந்த பாகனேரி, மண்ணில் பிறந்தததாலோ  என்னவோ, 
உன் பொறுமைக்கு சில நேரத்தில் எல்லையே  இல்லை...
கேள்வி, ஒன்று கேட்கிறேன் பதில் சொல் தோழியே?
நதிகள், உருவாகும் இடம் வேறு,வேறு இடங்கள் என்றாலும் அது சங்கமிக்கும் இடம் கடல் தானே !
ஆனால், நாம் இருவரும் ஒன்றாக ஒரே நாளில் வந்தாலும் இருது   வரை என்னை ஏன் உன் கடலில் சேர்க்கவில்லை(சேது வீடில்)??

சுவடுகள் !!

என் வீட்டு ஐ.நா சபை நீ 
அந்த காந்தியின் (மாமாவின்) கஸ்தூரிபாய் நீ,
என் வீட்டு கண்களை தன் கண்களுக்கு மேலாக
 காப்பாற்றும் "கண்ணாத்தாள்" நீ !
என்வீட்டு ஆலமரத்தை தன் பாசக் கரங்களால் 
  கட்டித் தாங்கும் வேர் நீ ,
என் வீட்டு சுமையை தன் தோள் மீது
 சந்தோசமாக தாங்கிக்கொள்ளும்
 சுமை தாங்கி நீ ,
என் தந்தைகளுக்கு,
 தன் ,
அன்னை உணவிட்ட நாட்களை விட 
உன் கரங்களால் நீ உணவிட்ட நாட்களே அதிகம் !!
அது தானோ என்னவோ,
 நீ கொடுக்கும் 
ஒரு பிடி சோறு கூட அந்த,
 அமிர்தத்தை விட அருமை !
அவர்கள் சங்கடங்கள் என்று 
வந்த போது
 உன் புன்னகையால் தீர்த்துக் கொடுத்தாய் !
கோரிக்கை ஒன்று ,
வைக்கிறேன் கேள் என் அன்னையே 
குறை தீர்க்க, குரல் கொடுக்க யாரும் இல்லை என்றாலும், கூடவே நிற்போம் உன் முதுகெலும்பாக !
சுமந்தவள் கொடுத்த சுமையை கூட ,
 சுகங்களாக சுமந்த உன்னைப் பற்றி சொல்ல ,
 சுவடுகள்  கூட பத்தாது - இந்த 
கவிதை வார்த்தைகளும் கொள்ளாது !

Thursday, July 12, 2012

நிலவு பயணம்!!

உன்னை சுற்றியே 

நிலவு பயணம் வேறு திசையில் இல்லை 

என் காதலும் அப்படிதான் 

உன்னை சுற்றியே

தீராத நிலவின் தேடல் போல்

ஆக்கிவிடாதே என் காதலை

ரசிக்க

Thursday, July 5, 2012

வாடகையாக!!

நீ என்றும் எனக்கே சொந்தம்,,
உன் அன்பும் எனக்கே வேண்டும்,,,
உன் இதயம் அதில் நான் மட்டும் குடியிருப்பேன்,,
வாடகை வேண்டுமென்றாலும் கேள்,
என் உயிரை வாடகையாக தருவேன்!!

நினைவுகள்!!!

உன்னை பார்க்காமல் வருடங்கள் போகலாம்,
பேசாமல் நாட்களும் போகலாம்,
ஆனால்,
உன் நினைவுகள் இல்லாமல்
ஒரு நிமிடமாவது போவதில்லை,,,,