Tuesday, July 17, 2012

புதுமைப் பெண்!!

மங்களத்தில் பிறந்து  நகரத்தில் (நகரம்பட்டியில்) மாங்கல்யம் 
பெற்ற மங்கை நீ ,
அந்த பாரதி, கண்ட புதுமைப் பெண் நீ,
அதனாலோ ,என்னவோ பாரதி பிறந்த அன்று ஜனனம் ஆனாய் !
சேதுவில் மூன்றாம் குலவிளக்கு நீ ,
அந்த தட்சிணாமூர்த்தி..தவறு!!...சுந்தரமூர்த்தியின் விஜயகவுரி (விஜயா) நீ,
நீ, பேசும்  தமிழை விட உன் ஆங்கிலமே இனிமையிலும் இனிமை !!
முயற்சியின் முக்கியத்தை உன் பிள்ளைகட்கு போதிக்கும் புத்தர் நீ !
அந்த (ஜெனரல்) டயர் கூட மறந்திருப்பான் அவன் அரங்கேற்றிய அந்த நாளை, ஆனால்  மறக்கவில்லை நீ !

No comments:

Post a Comment