அந்த காந்தியின் (மாமாவின்) கஸ்தூரிபாய் நீ,
என் வீட்டு கண்களை தன் கண்களுக்கு மேலாக
காப்பாற்றும் "கண்ணாத்தாள்" நீ !
என்வீட்டு ஆலமரத்தை தன் பாசக் கரங்களால்
கட்டித் தாங்கும் வேர் நீ ,
என் வீட்டு சுமையை தன் தோள் மீது
சந்தோசமாக தாங்கிக்கொள்ளும்
சுமை தாங்கி நீ ,
என் தந்தைகளுக்கு,
தன் ,
அன்னை உணவிட்ட நாட்களை விட
உன் கரங்களால் நீ உணவிட்ட நாட்களே அதிகம் !!
அது தானோ என்னவோ,
நீ கொடுக்கும்
ஒரு பிடி சோறு கூட அந்த,
அமிர்தத்தை விட அருமை !
அவர்கள் சங்கடங்கள் என்று
வந்த போது
உன் புன்னகையால் தீர்த்துக் கொடுத்தாய் !
கோரிக்கை ஒன்று ,
வைக்கிறேன் கேள் என் அன்னையே
குறை தீர்க்க, குரல் கொடுக்க யாரும் இல்லை என்றாலும், கூடவே நிற்போம் உன் முதுகெலும்பாக !
சுமந்தவள் கொடுத்த சுமையை கூட ,
சுகங்களாக சுமந்த உன்னைப் பற்றி சொல்ல ,
சுவடுகள் கூட பத்தாது - இந்த
கவிதை வார்த்தைகளும் கொள்ளாது !

No comments:
Post a Comment