சித்திரை மாதம் நித்திரை கழித்து,
வைகாசி மாதம்
என் ,
கூட என் வீட்டுக்கு வந்த செல்ல சித்தி நீ !
சித்தி அல்ல ! தவறு!!.என் தோழி நீ !
"பொறுத்தார் பூமி ,ஆள்வார் "என்ற சொல்லுக்கு மறு உதாரணம் நீ,
நாம் இருவரும் பகிர்ந்து கொண்ட சங்கடங்களை விட,
சிறு,சிறு நகைச்சுவைகள் தானே அதிகம் !!
அந்த பாரதிக்கு கிடைத்த சுமதி..தவறு.."சுகம் "நீ
சேது வீட்டின் இரண்டாம் குலவிளக்கு நீ ,
இந்த பாகனேரி, மண்ணில் பிறந்தததாலோ என்னவோ,
உன் பொறுமைக்கு சில நேரத்தில் எல்லையே இல்லை...
கேள்வி, ஒன்று கேட்கிறேன் பதில் சொல் தோழியே?
நதிகள், உருவாகும் இடம் வேறு,வேறு இடங்கள் என்றாலும் அது சங்கமிக்கும் இடம் கடல் தானே !
ஆனால், நாம் இருவரும் ஒன்றாக ஒரே நாளில் வந்தாலும் இருது வரை என்னை ஏன் உன் கடலில் சேர்க்கவில்லை(சேது வீடில்)??

No comments:
Post a Comment