Tuesday, April 24, 2012

தந்தை !!


எங்களை சுமக்காமல்  சுமக்கும் தாய் நீ ,
சேது சமுத்திரம் ...பிழை !!சேது சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி நீ,
பயத்தில் குழந்தையயும் ,
மனதில் சிரிப்பையும்  வைத்து ,
வாழ்க்கையை நோக்கி செல்லும் ஒருஎதார்த்தவாதி நீ ,
பரணி நட்சத்திரத்தில்  பிறந்துஎன்றும் தரணியை ஆளும்சந்திரன் நீ,
முன்று!! பொறியாளர்களை உருவாக்கிய,
தவறு !!!செதுக்கிய ,
பிரம்மா நீ,
நீ பார்க்காத உலகத்தையும் நீ
ஏணி போல்நின்றுபார்க்க செய்தாய் ,
பிப்ரவரி 18 இல்  பிறந்ததினலோ
என்னவோ ,
என் அய்யனின் 18படிகள்
போலஉன்
பக்தர்கள் (எங்களின்) சங்கடங்கள் கூட 
சுமைகள் அல்ல உனக்கு ,
சபரிநாதனை எங்களுக்கு காட்டிய  குருசுவாமி நீ ,
நீ எங்களுக்கு கொடுத்த அழியாத புதையல் கல்வி ,
இன்று தவம் இருந்துவேண்டுகிறேன்
அந்தசபரிநாதனிடம்!!!
அந்த வரம் வேண்டும் என்று என்றென்றும்
இருக்க வேண்டும் இந்த நேருவின் இந்திராவாக!சபரிநாதன் ,
எனக்கு ,கொடுக்க வேண்டும் அந்த சந்தோசத்தை  
அன்று
அந்த அணிலுக்கு ஸ்ரீ ராமமூர்த்திக்கு!! செய்த  சேவையில்
கிடைத்த
சந்தோஷத்தை!!


Saturday, April 7, 2012

கைலாசநாதன் !!!


ஓம்!! என்ற சொல்லின் முதல் உச்சரிப்பு நீ,
ருட்ராக்சக்தின் அதிபர் இவன்,
மூன்று மூர்த்திகளில் ஒருவன் இவன்,

நெற்றி கண்ணின் நாயகன் இவன்,
ஆதிபராசக்தியின் மன்னன் இவன்,
லிங்கத்தின் சூஸ்திர ரூபன் இவன்,
எப்போதும் தியானத்தில் இருக்கும்  மஹா யோகி இவன்,
நாட்டிய உலகத்தை ஸ்தாபித்த ராஜன் இவன்,
தவறு!!.... நாட்டியத்தின் ராஜன் (நடராஜன்இவன்,
பாற்கடல் மீது பள்ளி கொண்டிருக்கும் 
ரங்கநாதனின் பிரியா மைத்துனர்  இவன்,
அது தானே என்னவோ மைத்துனர் துணை 
இன்றி ஸ்ரீஹரியின் லீலைகளுக்குமுடிவே இல்லை,
சந்திரனை உன் வெப்பத்தால் அணைத்ததால் 
சந்திரசேகரன் ஆனாய் நீ,
அகில லோகத்தை காக்க நீ விஷ அமுதை  உண்டு 
 நீலகண்டன்  ஆனாய் நீ
லோக நாதாஅருணாச்சலேஸ்வராபரமேஸ்வரா... 
என 
ஆயிரம்  நாமங்கள் உடன்  இருக்கும்
 கைலாசநாதன் நீ
என் பிரிய சபரி நாதனின் 
தந்தையும் நீ,
அந்த ஸ்ரீ ராமனின் துணைவியை காக்க துணை நின்ற
 ராமேஸ்வரனும்  நீ,
லங்காதிபதியின் நேசம் நீ,
தீமை அழித்துதர்மத்தை தலை 
தாங்கும் ஈசன் நீ,
அது தானே என்னவோ வேறு யாருக்கும் இல்லாத
 அளவுக்கு உனக்கு மட்டும்
இத்தனை திவ்யதேசங்கள்  இவ்வுலகில் என் பிராணனே.... எம்பிரானே....

Friday, April 6, 2012

வித்தியாசம் ?

உறவுக்கும் உரிமைக்கும் 
என்ன வித்தியாசம்?
உரிமை உறவுகள்  இருக்கும் 
இடம் தானே  வரும்
ஆனால் அன்று
 உன் மௌனத்தின் பரிசு உறவுக்காகவா?
 இல்லை உரிமைக்காகவா?




Friday, March 30, 2012

"ஸ்ரீ ராமன்"


"ஸ்ரீஎன்ற சொல்லுக்கு உயிர்கொடுத்த ஸ்ரீ ராமன் நீ,
துளசி தாசனின்  நாயகன் நீ,
அஞ்சணை புத்திரனின் நாடி நீ,
தசரதனின்  புத்திரகாமேஷ யாகத்தின் பரிசு நீ,
ரகு குல  நாதனின் வம்சம் நீ,
ஜனகரின் புதல்வியை கரம் பிடித்த மன்னன் நீ,
சேதுசமுத்திரத்தின்  அஸ்திவாரம் நீ,
சிவனின்  அம்பை உடைத்த மாவீரன் நீ
தன் தந்தையின் நரைத்த 
முடியால் கூனியின் சூழ்ச்சிக்கு பலி ஆனவன் நீ,
தந்தையின் வாக்கைசகோதர பாசத்தைபத்தினியின்விரதத்தைபக்தியின் நேசத்தை......
மூவுலகத்துக்கும் ஸ்தாபித்த உன் புகழுக்கு எல்லையேஇல்லை...
தினமும் எழுதுகிறேன் உன் நாமத்தை....
அப்போதாவது...
ப்ராப்திக்க வேண்டும் ....
அந்த அணிலுக்கு நீ,
கொடுத்த
பாக்கியத்தை மண்ணுலகில் வாழும் எல்லோருக்கும்......

Wednesday, March 28, 2012

முத்து !!

என்ன சொல்ல...  
உன்னை பற்றி,  
ஜூலை மாதத்தில் மலர்ந்த முத்து நீ,
உன் பெயரிலேயே தமிழ் கடவுளை வைத்திருப்பவன் நீ, 
முத்து குமரன் என்று பெயருள்ள ஸ்ரீ ராமன் நீ,  
முத்து போல நீ பேசும் உன்
தமிழ் வார்த்தைகளுக்கு ஒரு எல்லையே  இல்லை..
எந்திரன் கூட தோற்று போகும் உன் டைப்பிங்  ஸ்பீடில்..
நீ கட்டும் கட்டிடம் போல உன் வாழ்வு ஒயரட்டும்...
கோரிக்கை ஒன்று வைக்கிறேன்
அண்ணா...
என்ன ஆனாலும் உன் நகைச்சுவை உணர்வை
மட்டும் மறந்து விடாதே...
ஏன் என்றால் நெருப்பு இல்லாமல் புகையாது...
உன் நகைச்சுவை இல்லாது இந்த பூமி சுற்றாது.

Tuesday, March 27, 2012

மெளனம்

கடற்கரையில் மெளனம்... 
அலைகளை ... 
ரசிப்பதற்காக !
 பள்ளியில் மெளனம்...
 பாடம் ... 
பதி(புரி)வதற்காக ! 
தியானத்தில் மெளனம்... 
மனதை ... 
ஒருமுகப்படுத்துவதற்காக ! 
தோல்வியில் மெளனம்..
வெற்றி ...

Wednesday, March 21, 2012

ஓவியம்

என் தாய் சித்தரித்த ஓவியம் நீ...
உத்தராயண தினம் 

அன்று ,
திருவாதிரை நக்க்ஷதிரத்தில் பிறந்த
 ஸ்ரீராமன் நீ...!!
சந்திரனின் ராஜ்யத்தை 

தலை,
 தாங்கும் தளபதி நீ..!!!
நான் நெஞ்சில்,

 சுமந்த,
 மூத்த பிள்ளை நீ...!!
பொறுமையின்,
சிகரம் நீ...!!
நீ, பேசிய வார்த்தைகளை விட,

 உன் கண்கள் பேசியது தான் அதிகம்...
நீ வாங்கும் (BE) பட்டம் தான்,

 இந்த 
வனவாசத்தில் உனக்கு 
கிடைக்க போகும் பட்டாபிசேகம்....
தவமாய் இருந்து,

வரம் கேட்டு கத்து இருக்கிறேன் 
அந்த
 பட்டாபிசேகத்தை இந்த
 கண்களால் காண....!!!
கண்களில் அன்று வரும், 

கண்ணீர் தான்
 தித்திக்கும் என்றென்றும்..!!
ஏழேழு, ஜென்மத்துக்கும்

 நம் ,
உறவு இருக்க வேண்டும்...
அது தான்,
 என்னவோ... 
உன்னை காண 
எனக்கு ஏழு வருடங்கள் ஆகி விட்டது...
ஏழு வருடங்கள் ஆனாலும்,

 எழுபது வருடங்கள் ஆனாலும்,
 என்றென்றும் எனக்கு "BABIE" நீ.......
- Show quoted text -