Tuesday, May 29, 2012

நவ மணிகள்!!

சேது சாம்ராஜ்ஜியத்தில் நான்காம் அத்தியாயம் நீ!
அந்த நடராசனின் சலங்கையின்,
நவ மணிகள் பிரிந்ததில் பிறந்து நவசக்தி ஆனவன் நீ!
என் வீட்டின் சத்ருகன் (ராமனின் சகோதரன் ) நீ ,
தன்னுடைய பதினாறு வயதில் இருந்து தன் சுமையை
தானே தாங்கும்  சுமை தாங்கி நீ !
நீ  கட்டும்  கட்டிடம்  போன்றது  உன்  மன  வலிமையையும் ,
 நீ  எடுக்கும்  முடிவுகளும் !
பலாவின் வெளித்தோற்றம் போன்றது உன் தோற்றம்... 
கரடுமுரடானது !
ஆனால் பலாச்சுளை போன்று தித்திப்பு  உன் மனது! ..
மனிதனின் முகத்தைப் பார்த்து மனதைக் 
கணிக்கும் எந்திரம் நீ !
நீ  காணும்  பார்வை  அந்த  தொலைநோக்கியின்  பார்வையை விட
கூர்மையானது...தெளிவானது!    
நன்றி சொல்கிறேன் உனக்கு ..
ஏனென்றால்  சித்தியை தங்கையாக எனக்கு பரிசாக தந்ததற்கு !

Sunday, May 27, 2012

தங்கை !!


கோடை  மாதத்தில் என் வீட்டு தோட்டத்தில் 
பூத்த  மலர் நீ ,
நான் அம்மா (சுதாமா) என்று  அழைக்கும்
என் மகள் நீ ,புத்த  பௌர்ணமி  அன்று பிறந்து,  
 நான்  ஞானம்  செய்யும் போதி  மரம்  நீ ,
என்னை அலங்காரப்படுத்தும் அழகு நிபுணர் நீ ,
என் தாய் வீட்டு சீதனம் நீ ,
எனக்கு மிதிவண்டி (Cycle)மிதிக்கக் கற்றுக்
கொடுத்த ஆசான் நீ !
மிகவும் பாக்ய சாலி நான் ஏன் 
என்றால்,
உன்  குழந்தை வாங்கப் போகும் திட்டுக்கள் 
அடிகளை விட,
நான் உன்னிடம் வாங்கியது தானே அதிகம்,
அந்த நடராஜன் கூட ஆசைப் படுவான் உன்னிடம் நடனம் கற்றுக்கொள்ள.!
குறும்புகளில் குழந்தையையும்,
கோபத்தில் குஷி  ஜோவையும் வைத்திருக்கும் 
குழந்தை நீ ,
கோரிக்கை வைக்கிறேன் கேளடி 
என் கண்ணே !
என்ன தான் இருந்தாலும் கோபத்தில்,
 வார்த்தைகளை வீசி விடாதே !
ஏன் என்றால்,
 கோபத்தை ,விட வார்த்தைகளின்  காயம்  மறையாது ,
காலங்கள் திசை மாறிப்போனாலும்
 ,
என் கரங்களில் உன்னை வைத்து 
தாங்குவேன் இது உறுதி!
மகா  பாக்கியசாலி உன்  மன்னவன்,
மெட்டி  இடும்  அந்த  கரங்களால்  
தாங்க வரம்  பெற்றவனே அந்த  வரங்கள் (நாட்டியம் ) ஆடும் உன்  பாதத்தை!  

கடலின் அலைகள் !!



சேதுவின்  அத்தியாயத்தில்  மூன்றாம் பாகம்  நீ ,
கிராமத்தில்  பிறந்த அந்த   பாரதி  நீ ,
தன் அன்னையை  மரணத்தின்  எல்லையில் பார்த்த
 பரசுராமன்  நீ ,
தனக்கென கொள்கைகளை  வகுத்து  வாழும் 
சுப்ரமணிய பாரதி    நீ ,
கடும் முயற்சி  விஸ்வருபம்  ஆகும்  என்ற
 சொல்லுக்கு  உதாரணம்  நீ ,
ஒரு  அடுக்குக்கு ஐந்தே இலை என்று
 சொல்லிக்கொடுத்த  ஆசான் நீ !
அந்த  கடலின்  அலைகள்   போல  உனது மனது ,
அது  தானோ என்னவோ  நீ தரையில்  ,
நடந்ததை விட  ஜல தேவதையை மிதித்த 
நேரம் தான் அதிகம்!!
பார்த்ததில்லை  எவரையுமே  இந்த,
 லோகத்தில் உபசரணையில்  உன்னை  போல !
மகாசௌபாக்யவதி  நான்,ஏன்  என்றால்

 உன்  திருமண நாள்
அன்று நான் ஜனனம் ஆனேன்  இந்த  பூமியில்!
கடலின் அலைகள்  போல உயரட்டும்  உன்  பேரும்  புகழும்,
கோரிக்கை ஒன்று வைக்கிறேன் தந்தையே
உன் மகளாக
பிழை ஏதும் இருந்தால் என்னை கண்டித்து விடு
என்னை தண்டித்து விடாதே !

Monday, May 21, 2012

ஆலமரம் !!


என் வீட்டின் ஆலமரம்  நீ ,
அந்த கதிரவன் எழும் முன் உதிக்கும் சூரியன் நீ.!
உழைப்பின் சமஸ்தானம்  நீ,,
ராமேஸ்வரத்துக்கு சென்ற என் பாட்டிக்கு ஏற்ற அரிய பொக்கிஷம் நீ !
உன்னிடம் நான் கற்றுக் கொண்டது
மனதோடு  உழைத்தால் அந்த  இமாலயத்தின்  உச்சியை கூட  தொட்டு  விடலாம் !
நீ  எங்களுக்கு  கொடுத்த  உயில்  கல்வி !
கந்தனின்  நாமத்தை  அந்த  அவ்வை உச்சரித்ததை  விட , 
நீ  உச்சரித்தது தான்  
அதிகம்!  
அது  தானோ  என்னவோ 
உனக்கு,
கந்தன்  கொடுத்த  தவப்  பரிசு  உன்  வள்ளியம்மை !
துணை  வந்தவள்  துணை  நில்லாமல்
போனாலும்,
துணை  இருப்பாள்  உன்  வீட்டு இரண்டு  தூண்களாக!
என்  வீட்டுத்  தோட்டத்துப்  பின் 
 இருக்கும் 
 பழங்களின்  சுவை  கூட  உன்  உழைப்பின்  பலன்கள்  தான் !!
அந்த  ராமன்  கட்டிய  பாலத்தை  (சேதுசமுத்திரம் )விட,
இந்த  சேது  என்  கிராமத்துக்கு  கட்டிய  கட்டிடங்கள்  தான்  அதிகம் ,
நான்  மிகவும்  அதிர்ஷ்டசாலி  ,
ஏன்  என்றால்,
அன்று  அந்த  வள்ளிக்கு  கிடைத்த 
திட்டை  விட  இன்று  இந்த  வள்ளிக்கு  கிடைத்த  திட்டு  மிகக்  குறைவு !
நீ அப்பாவுக்கு கொடுக்காத கைக்காசை கூட எங்களுக்கு கொடுத்தாய் நீ அளித்த பண்பு மற்றும் கல்வி போல!வரம் ஒன்று  கேட்கிறேன்  என்  ஐய்யனிடம் 
மறு  ஜென்மம்  ஒன்று  இருந்தால் பிறக்க வேண்டும் இந்த வீட்டில் மகளாக 
வீட்டைத்  தாங்க  வேண்டும்  ஆலமரத்தின்  விழுதாக !
.

Saturday, May 12, 2012

அன்னை !!!

என் தந்தையின்  முதுகெலும்பு நீ ,
சேது வீட்டின் குலவிளக்கு நீ ,
என்  வீட்டின் சௌபாக்யலட்சுமி  நீ ,
எனக்குள் இருக்கும் வீரலட்சுமி நீ ,
விடாமுயற்சி ஒன்றை மட்டும் மூலமந்திரமாக கொண்டு 
வாழும் தைரியலட்சுமி நீ ,
எனக்கு வைரமும், மாணிக்கங்களும்  (தம்பியும் ,தங்கையும் )
பரிசாக தந்த கருணாலட்சுமி  நீ ,
தன் ஏழ்மையான புன்னகையால் எல்லோரின் மனதையும்  
பரவசம் ஆக்கும்  ஸ்ரீலட்சுமி தேவி நீ ,
என்  குடும்பத்தின் ஒவ்வொரும் விஜயத்துக்கு 
பின்னால்  இருக்கும் ஒரு விஜயலட்சுமி நீ,
தீபாவளி அன்று பிறந்த என்  
வீ ட்டு அஷ்டலட்சுமி நீ ,
மற்றவர்களுக்கு உதவிகரங்களை நீட்டும் ஒரு 
அக்ஷயபாத்திரம் நீ ,
எனக்கு தமிழ் மொழியை கற்றுகொடுத்த ஆசான் நீ ,
கிராமத்தில் பிறந்தாலும் கருத்துக்களில்
 ஒரு
முற்போக்கு சிந்தனைவாதி நீ ,
உழைப்பின் சிகரம் நீ ,
நான் ஆசையாய் கிண்டல்  செய்யும் தோட்டா சிணுங்கி நீ ,
பெற்றேன் பாக்கியத்தை நீ ,
கருவறையில் என்னை சுமந்ததால் !
பெற்றேன் பாகத்தை 
அந்த ,ஸ்ரீ ஹரியைவிட  நான் ,
அதிர்ஷடசாலி,
ஏன்
 என்றால் அவன் சாய
பாம்பு மட்டும் தான்  இருக்கிறது!
ஆனால்,
 நான் சாய்த்துக்கொள்ள உன் மடி இருக்கிறது!

Sunday, May 6, 2012

அலைகள்!!!

!
பாஞ்சாலியின் கண்ணீரால்

பாரதயுத்தம்,
கண்ணகியின் சபதத்தால்
மதுரையின் அழிவு ,
சீதையின் தனிமையால்
இலங்கையின் அழிவு ,


என்று எந்த பெண்ணின் கண்ணீரின்
சாபமோ தெரியவில்லை இந்த
கடலின் அலைகள் பொங்கி 
எழுகிறது (சுனாமி )

Thursday, May 3, 2012

வள்ளல்!!

வள்ளி  பெற்ற வள்ளல்  நீ ,
சேதுவின் ,அகராதியில்  நான்காவது  பாகம்  நீ ,
உழைப்பை மட்டும்  கடவுளாக நம்பி  இருக்கும் 
 ஒரு
 நாத்திகாவதி நீ ,
என்னை  திட்டும், நானும் 
கோபித்துக் கொள்ளும்  முதியவர் !! - தவறு,என்றும் 
 இளமையாக
இருக்கும் என்  தோழன்  நீ,
நீ  பேசிய  பேச்சில் குயில் 
 ஓசை 
 கேட்டது  இல்லை,
ஆனால், உன்  அன்புக்கு மயங்கிய 
மனிதர்களை பார்த்திருக்கிறேன்..
நீ ,கட்டிய  ஏரிகளை விட -
பெரியது  உன்  சிந்தனைகளும் ..செயல்களும் ,
சிதம்பரத்தில்  பட்டம்  பெற்ற  நீயும்..
மதுரையில்  பட்டம்  பெற்றவர்களை 
ஆட்சி  செய்யும்  மன்னாதிமன்னன்  நீ!
பாக்கியம்  பெற்றேன் 
 நான் ,
அன்று  அந்த  வள்ளி,
உன்னிடம்  உரையாடிய  நேரத்தை  விட 
இன்று  இந்த  வள்ளி உரையாடிய 
நேரம்  தான்  அதிகம் ,
மகளாய்
கோரிக்கை  ஒன்று  வைக்கிறேன் !!
கேள் ,
என் மன்னா,
அந்த  குந்தியின்  புத்திரன்  போல ,
நீ , செய்யும்  தர்மத்தை  கூட ,
 தர்மம்  செய்து  விடாதே
ஏன் என்றால்  இந்த 
 கலியுகத்தில்  உன்  போன்ற 
கர்ணன்களை  விட  கம்சர்கள்  தான்  அதிகம்!