Sunday, May 27, 2012

தங்கை !!


கோடை  மாதத்தில் என் வீட்டு தோட்டத்தில் 
பூத்த  மலர் நீ ,
நான் அம்மா (சுதாமா) என்று  அழைக்கும்
என் மகள் நீ ,புத்த  பௌர்ணமி  அன்று பிறந்து,  
 நான்  ஞானம்  செய்யும் போதி  மரம்  நீ ,
என்னை அலங்காரப்படுத்தும் அழகு நிபுணர் நீ ,
என் தாய் வீட்டு சீதனம் நீ ,
எனக்கு மிதிவண்டி (Cycle)மிதிக்கக் கற்றுக்
கொடுத்த ஆசான் நீ !
மிகவும் பாக்ய சாலி நான் ஏன் 
என்றால்,
உன்  குழந்தை வாங்கப் போகும் திட்டுக்கள் 
அடிகளை விட,
நான் உன்னிடம் வாங்கியது தானே அதிகம்,
அந்த நடராஜன் கூட ஆசைப் படுவான் உன்னிடம் நடனம் கற்றுக்கொள்ள.!
குறும்புகளில் குழந்தையையும்,
கோபத்தில் குஷி  ஜோவையும் வைத்திருக்கும் 
குழந்தை நீ ,
கோரிக்கை வைக்கிறேன் கேளடி 
என் கண்ணே !
என்ன தான் இருந்தாலும் கோபத்தில்,
 வார்த்தைகளை வீசி விடாதே !
ஏன் என்றால்,
 கோபத்தை ,விட வார்த்தைகளின்  காயம்  மறையாது ,
காலங்கள் திசை மாறிப்போனாலும்
 ,
என் கரங்களில் உன்னை வைத்து 
தாங்குவேன் இது உறுதி!
மகா  பாக்கியசாலி உன்  மன்னவன்,
மெட்டி  இடும்  அந்த  கரங்களால்  
தாங்க வரம்  பெற்றவனே அந்த  வரங்கள் (நாட்டியம் ) ஆடும் உன்  பாதத்தை!  

No comments:

Post a Comment