Sunday, May 27, 2012

கடலின் அலைகள் !!



சேதுவின்  அத்தியாயத்தில்  மூன்றாம் பாகம்  நீ ,
கிராமத்தில்  பிறந்த அந்த   பாரதி  நீ ,
தன் அன்னையை  மரணத்தின்  எல்லையில் பார்த்த
 பரசுராமன்  நீ ,
தனக்கென கொள்கைகளை  வகுத்து  வாழும் 
சுப்ரமணிய பாரதி    நீ ,
கடும் முயற்சி  விஸ்வருபம்  ஆகும்  என்ற
 சொல்லுக்கு  உதாரணம்  நீ ,
ஒரு  அடுக்குக்கு ஐந்தே இலை என்று
 சொல்லிக்கொடுத்த  ஆசான் நீ !
அந்த  கடலின்  அலைகள்   போல  உனது மனது ,
அது  தானோ என்னவோ  நீ தரையில்  ,
நடந்ததை விட  ஜல தேவதையை மிதித்த 
நேரம் தான் அதிகம்!!
பார்த்ததில்லை  எவரையுமே  இந்த,
 லோகத்தில் உபசரணையில்  உன்னை  போல !
மகாசௌபாக்யவதி  நான்,ஏன்  என்றால்

 உன்  திருமண நாள்
அன்று நான் ஜனனம் ஆனேன்  இந்த  பூமியில்!
கடலின் அலைகள்  போல உயரட்டும்  உன்  பேரும்  புகழும்,
கோரிக்கை ஒன்று வைக்கிறேன் தந்தையே
உன் மகளாக
பிழை ஏதும் இருந்தால் என்னை கண்டித்து விடு
என்னை தண்டித்து விடாதே !

No comments:

Post a Comment