சேது வீட்டின் குலவிளக்கு நீ ,
என் வீட்டின் சௌபாக்யலட்சுமி நீ ,
எனக்குள் இருக்கும் வீரலட்சுமி நீ ,
விடாமுயற்சி ஒன்றை மட்டும் மூலமந்திரமாக கொண்டு
வாழும் தைரியலட்சுமி நீ ,
எனக்கு வைரமும், மாணிக்கங்களும் (தம்பியும் ,தங்கையும் )
பரிசாக தந்த கருணாலட்சுமி நீ ,
தன் ஏழ்மையான புன்னகையால் எல்லோரின் மனதையும்
பரவசம் ஆக்கும் ஸ்ரீலட்சுமி தேவி நீ ,
என் குடும்பத்தின் ஒவ்வொரும் விஜயத்துக்கு
பின்னால் இருக்கும் ஒரு விஜயலட்சுமி நீ,
தீபாவளி அன்று பிறந்த என்
வீ ட்டு அஷ்டலட்சுமி நீ ,
மற்றவர்களுக்கு உதவிகரங்களை நீட்டும் ஒரு
அக்ஷயபாத்திரம் நீ ,
எனக்கு தமிழ் மொழியை கற்றுகொடுத்த ஆசான் நீ ,
கிராமத்தில் பிறந்தாலும் கருத்துக்களில்
ஒரு
முற்போக்கு சிந்தனைவாதி நீ ,
உழைப்பின் சிகரம் நீ ,
முற்போக்கு சிந்தனைவாதி நீ ,
உழைப்பின் சிகரம் நீ ,
நான் ஆசையாய் கிண்டல் செய்யும் தோட்டா சிணுங்கி நீ ,
பெற்றேன் பாக்கியத்தை நீ ,
கருவறையில் என்னை சுமந்ததால் !
கருவறையில் என்னை சுமந்ததால் !
பெற்றேன் பாகத்தை
அந்த ,ஸ்ரீ ஹரியைவிட நான் ,
அதிர்ஷடசாலி,ஏன்
என்றால் அவன் சாய
பாம்பு மட்டும் தான் இருக்கிறது!
ஆனால்,பாம்பு மட்டும் தான் இருக்கிறது!
நான் சாய்த்துக்கொள்ள உன் மடி இருக்கிறது!

No comments:
Post a Comment