Tuesday, August 28, 2012

டீமார்ட் -ராணி!!



மழை காலத்தில் சுந்தரம் என்ற தோட்டத்தில் பூத்த மலர் நீ,
நான் ராணி !!தவறு  டீமார்ட் -ராணி   என்று  பேர்  சொலி  அழைக்கும்  செல்ல " டீமார்ட் -ராணி"  நீ ,
சேதுவின் கடலின்  மூன்றாவதாக பிறந்த முத்து நீ,
சுந்தரின்  ராஜ்யத்தை  ஆள   பிறந்த  ராணி  பில்லை!!சேதுராணி நீ,
அந்த மேட்டிஒலி சலங்கையில் கேட்கும்" லீலா" என்ற ஓசை நீ ,
நாம் இருவரும் பழகிய நாட்களை விட நாம் இருவரும் பகிர்ந்துகொண்ட,காட்சிகள்  தானே அதிகம் ,
மறக்க முடியாது நம் இருவரும் (ஸ்கூட்டியில் )பயணம்   சென்றதில் அனுபவம் ,
அந்த  சந்திரமுகி  அறையில் நாம் எல்லாரும் சேர்ந்து பேசுனதில் விஷயங்களை விட,நாம்  பகிர்ந்து கொண்ட சிறு சிறு நகைச்சுவைகள் மற்றும் குறும்புகள் தானே அதிகம் ,
நீ  கட்டும் கட்டிடம் போல உயர்த்தும்,
உன் வாழ்வு  ,
காத்திருக்கிறேன் அந்த தினத்துக்காக இந்த ராணியின் ராஜாவை பார்க்க அன்று வரும் கண்ணீர் கூட  தித்திக்கும் என்  தோழிக்காக

ப்ரியம் ..


ப்ரியம்  என்று பெயர் வைத்துள்ள என் வீட்டின் பிரியா சித்தி நீ ,
சேது வீட்டின் நாலாம்  குலவிளக்கு  நீ ,
அந்த நவசக்தியின் ஆதிசக்தி நீ ,
பழகிய சிறிது நேரத்தில் என்னுடைய ப்ரிய தோழி  நீ,
எங்கள் அனைவருக்கும் நீ  கொடுத்த அறிய பொக்கிஷம்
என் சித்தியை  என்  தங்கையாக கொடுத்தது  
என்  (லதாசித்தியின்   ) நிழல் நீ ,
நன்றி சொல்கிறேன் உனக்கு ,
அவள் பொறுப்பை தன்  பொறுப்பாக,ஏற்று என்றும்  என்  தந்தையின்  தூணாக  நின்று  துணையாக  இருக்க வேண்டுகிறேன்.... 

Friday, August 10, 2012

சுமைதாங்கி...



15/08/1947,ஆம் ஆண்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்து 
என் சுதந்திர நாட்டில் பிறந்த காந்தி(விநாயகம் ) நீ,
எதையும், தன் இளமையான சிரிப்பால் சகித்துக்கொள்ளும் 
மோகன்தாஸ் காந்தி!! தவறு !!"காந்தி விநாயகம்" நீ,
என் வீட்டின் ஆலமரத்தையும் அதன்,வேரையும்
 என்றும் கட்டி காக்கும் காவலன் நீ,
என்  வீட்டு அன்னையை (கண்ணாத்தாள்) கரம் பிடித்த
 அந்த சுந்தரேசன் நீ ,
என் அன்னையின் பிரிய அண்ணனும் நீ,
பொறுமையின் சிகரம் நீ,
உன் உழைப்பின் வேகத்தை உன் பாதங்களில் இருக்கும் உன் நாடி நரம்புகளை கேட்க வேண்டும்..
அது சொல்லும் நீ உனக்காக நடந்ததை விட
 எங்களுக்காக நடந்தது  தானே அதிகம்...
 மற்றவர்கள் யாராவது உன்னை கோவித்துக்கொள்ளும்  போது  ,
அதை ஒரு அன்னை போல மெலிதாக சிரித்து,
ஒரு கைக்குழந்தை போல  அவர்களை மறந்து விடுவாய்  நீ ,
தன் கரம்  பிடித்தவளின் சுமைகளைஅன்றும்,இன்றும்,என்றும் 
தாங்கும்  சுமைதாங்கி நீ ,
அந்த தர்மனுக்கு வருண பகவான் பிடித்த குடை போலவும்  
உனக்கு முதுகெலும்பாகவும் இருப்போம் உன் இனி வரும் பயணத்தில்....



Thursday, August 9, 2012

கண்ணன்!!

தன்  அரிய மௌனத்தால் அனைவரையும் 
தன் பக்கம் இழுக்கும்,
ஒரு காந்த சக்தி படைத்தவன் நீ,

ராதையின் (ராதிகாவின்)கண்ணன் நீ, 
அந்த வைதேகிக்காக காத்திருந்தது 
விஜயகாந்த்  மட்டும் அல்ல நீயும் தான்,
காதலுக்கு  மரியாதையை கொடுத்த

அந்த "விஜய்யின்" ரசிகன் நீ ,
நித்திரையில் அந்த ரங்கனை (தவறு),
அந்த கும்பகர்ணனையும்
 மிஞ்சும் என் அண்ணன் ,
தெரிந்து தெரியாத என் தவறுகளை தெரிந்து 
இருக்கும் என்  தோழன்   நீ ,
உன்னிடம் பழகியது குறுகிய காலமாய் இருந்தாலும்,
நம்மை ஒரு நூலில் கட்டிய ,
இந்த பந்தத்தை கொடுத்த என்,

அய்யன்னுக்கு என் இனிய நன்றிகள் ,
அந்த கணினி போல் உயர வேண்டும்,
உன் வாழ்வும் பிரகாசிக்கட்டும் 

உன் பேரும்!!

புதிர்...

தன்  குறும்புகளால்,இளமையான சிரிப்பால்,
அனைவரையும் கவர்ந்து இழுக்கும்  மாய கண்ணன் நீ,
என் வீட்டில் நான் தினமும் படிக்கும் தினசரி நாளிதழ் நீ,
என்னை ஒவ்வொரு கட்டத்திலும் 
விமர்சனம் செய்யும் விமர்சகன் நீ ,
நீ விமர்சனம் செய்ததை விட உன்னில்,இருந்த விஷயங்கள்  தானே அதிகம்,
கள்ளி  கூட ஆசைப்படும் நீ இருக்கும் தோட்டத்தில் வளர  ,
மணம் வீசும் சந்தனம் போல நீ,
உன் புதிரான பெயருக்கு விடை நீ,
உன் துன்பத்தை கூட மறைத்து,
மற்றவர்களுக்கு இன்பம் அளிப்பவன் நீ.
இதே போல் என்றும் எங்களுக்கு இன்பத்தை மட்டும் தா..... 

Wednesday, August 1, 2012

ராதே!!


ராதே!!என்று பெயர் வைத்து உன்  குரலால் ஸ்வரங்களையே ஆட்டிப்  படைப்பவள்  நீ, 
 


என்  அண்ணனை(பாலாஜி) தன்,
குறும்புகளால் கவர்ந்தவள் (அம்மு ) நீ ,
அந்த காளிதாசன் வர்ணித்த  சகுந்தலை  நீ,
ஜூலை 8 ஆம் நாள் பிறந்த அந்த நந்தகோபலனின் 8 ஆம்  குமரனை யாசிக்கும்" மீரா" நீ ,
குழந்தை மணம் படைத்தவள்  நீ ,
என் செம்மொழி(தமிழ்மொழி ) பேசுமொரு ஓமணப்பெண்  நீ ,
நீ படித்த பாடங்களை விட நீ,அந்த," ஸ்ரீஹரி" பாடல்களில் தியானம் செய்தது தான் அதிகம் ,               
அது,தானோ என்னவோ  உனக்கு அவன் கொடுத்த  அரியப்  பொக்கிஷம்,  
என் அண்ணன் உன் மன்னன்,
வேண்டுகிறேன் அந்த அய்யனிடம் நீ ,பாடும் ஸ்வரங்களைப் போல் சுகங்கள் ,
மலர வேண்டும் உன் வாழ்வில்....