Thursday, August 9, 2012

புதிர்...

தன்  குறும்புகளால்,இளமையான சிரிப்பால்,
அனைவரையும் கவர்ந்து இழுக்கும்  மாய கண்ணன் நீ,
என் வீட்டில் நான் தினமும் படிக்கும் தினசரி நாளிதழ் நீ,
என்னை ஒவ்வொரு கட்டத்திலும் 
விமர்சனம் செய்யும் விமர்சகன் நீ ,
நீ விமர்சனம் செய்ததை விட உன்னில்,இருந்த விஷயங்கள்  தானே அதிகம்,
கள்ளி  கூட ஆசைப்படும் நீ இருக்கும் தோட்டத்தில் வளர  ,
மணம் வீசும் சந்தனம் போல நீ,
உன் புதிரான பெயருக்கு விடை நீ,
உன் துன்பத்தை கூட மறைத்து,
மற்றவர்களுக்கு இன்பம் அளிப்பவன் நீ.
இதே போல் என்றும் எங்களுக்கு இன்பத்தை மட்டும் தா..... 

No comments:

Post a Comment